/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொருள் டெலிவரியில் ரூ.5 லட்சம் கையாடல்
/
பொருள் டெலிவரியில் ரூ.5 லட்சம் கையாடல்
ADDED : ஜன 01, 2026 04:50 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் ஆன்லைன் விற்பனை பொருட்களை டெலிவரி செய்த வகையில், 5 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 30. கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்களை டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார்.
இவர், ஆறு மாதங்களாக டெலிவரி செய்த பொருட்களுக்கான, 4.94 லட்சம் ரூபாய் பணத்தை நிறுவனத்திடம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக, நிறுவனம் விசாரித்ததில், 4.94 ரூபாயை பார்த்திபன் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட டெலிவரி மையத்தின் மேலாளர் நிர்மல்குமார், கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், பார்த்திபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

