sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

/

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை


ADDED : டிச 07, 2024 01:40 AM

Google News

ADDED : டிச 07, 2024 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, 135.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் 1,040 கட்ட 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

பின் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அதே பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் இலவச வீட்டு மனை வழங்குவதாக தெரிவித்து வருவாய் அதிகாரிகள் அவர்களை அப்புறப்படுத்தினர்.

அதிகாரிகள் தெரிவித்த அரசு புறம்போக்கு இடத்தில் குடிசைகள் அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து நேற்று முருக்கம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி திருத்தணி ஆர்.டி.ஓ.,அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து மனு அளித்து விட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us