ADDED : ஆக 16, 2025 12:33 AM
திருத்தணி'சுதத்திர தின விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோவில் மற்றும் பவானியம்மன் கோவில்களில் சமபந்தி விருந்து நடந்தது.
நாட்டின் 79வது சுதந்திர தின விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் நேற்று மதியம் 12:30 மணிக்கு மூலவர், ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துர்க்கையம்மன் மற்றும் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, சமபந்தி விருந்து நிகழ்ச்சி, மலைக்கோவிலில் உள்ள அன்னதான கூடத்தில் நடந்தது. இதில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி உள்ளிட்டோர் சமபந்தி விருந்தை துவக்கி வைத்தனர்.
அதேபோல், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர், திருப்பாச்சூர் வாசீஸ்வரர், கரிம்பேடு நாதாதீஸ்வரர் மற்றும் பெரியநாகபூண்டி நாகேஸ்வரர் ஆகிய கோவில்களிலும் சமபந்தி விருந்து நடந்தது.
ஊத்துக்கோட்டை பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் நடந்த விழாவில், அம்மனுக்கு சாற்றப்பட்ட புடவைகள், 10,000க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் செயல் அலுவலர் பிரகாஷ் செய்திருந்தனர்.

