/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணல் கடத்திய லாரி பறிமுதல் இருவர் கைது
/
மணல் கடத்திய லாரி பறிமுதல் இருவர் கைது
ADDED : அக் 17, 2024 10:50 PM
கனகம்மாசத்திரம்:ஆந்திர மாநிலத்தில் இருந்து அனுமதியின்றி லாரி வாயிலாக ஆற்று மணல் கனகம்மாசத்திரம் வழியாக திருவள்ளூருக்கு கடத்தப்படுவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கனகம்மாசத்திரம் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட லாரியை போலீசார் சோதனை செய்த போது, அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து ஆற்றுமணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து லாரி ஓட்டுனர்களான கும்மிடிப்பூண்டி ஈகுவார்பாளையத்தை சேர்ந்த பாண்டியன், 29, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சசிதரன், 35 ஆகிய இருவரை கைது செய்தனர்.
லாரியை பறிமுதல் செய்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.