ADDED : டிச 10, 2024 01:15 AM
ஊத்துக்கோட்டை,ஊத்துக்கோட்டை அருகே, தேவந்தவாக்கம் கிராமத்தில், திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தேவநாத ஈஸ்வர சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில், நேற்று மாலை, 4:30 மணிக்கு கைலாய வாத்தியம் முழங்க, 108 சங்காபிஷேகம் நடந்தது.
பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
l திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர் கோவிலில், கார்த்திகை கடைசி சோமவாரமான நேற்று, காலை 9:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதை தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு, கோவில் வளாகத்தில், 108 சங்காபிஷேக விழாவும், சிறப்பு பூஜைகளும் நடந்தன.இதே போல, திருத்தணி நகரத்தில் உள்ள சிவன் கோவில்களில் கடைசி சோமவார பூஜைகள் மற்றும் சங்காபிஷேகம் நடந்தன.

