/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக்கிலிருந்து தவறி விழுந்த சத்தரை வாலிபர் உயிரிழப்பு
/
பைக்கிலிருந்து தவறி விழுந்த சத்தரை வாலிபர் உயிரிழப்பு
பைக்கிலிருந்து தவறி விழுந்த சத்தரை வாலிபர் உயிரிழப்பு
பைக்கிலிருந்து தவறி விழுந்த சத்தரை வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜன 23, 2025 08:03 PM
மப்பேடு, :கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்த, சத்தரை பள்ளகாலனியைச் சேர்ந்தவர் சரவணன், 22; தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இவர், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, சாலையின் குறுக்கே மற்றொரு வாகனம் வந்ததால் பிரேக் போட்டுள்ளார். இதில், இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்து விபத்தில் சிக்கினார்.
தலையில் படுகாயமடைந்த அவரை அப்பகுதிவாசிகள், மப்பேடில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மப்பேடு போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, அவரது தந்தை சண்முகம் அளித்த புகாரையடுத்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

