sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை

/

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை


ADDED : நவ 19, 2024 06:41 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்; மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவியருக்கு, 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்குள் உள்ள மாணவ - மாணவியருக்கு, அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

நடப்பு 2024- - 25ம் கல்வி ஆண்டிற்கு, புதிய மற்றும் புதுப்பித்தல் ஆகிய விண்ணப்பத்தை, மாணவ - மாணவியர் கல்வி நிறுவனங்களில் அளிக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை, சென்னை சேப்பாக்கம், எழிலகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அலுவலகத்திற்கு, வரும் டிச., 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us