sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குடிநீர் குடம் சுமக்கும் மாணவியர் பிளேஸ்பாளையத்தில் அவலம்

/

குடிநீர் குடம் சுமக்கும் மாணவியர் பிளேஸ்பாளையத்தில் அவலம்

குடிநீர் குடம் சுமக்கும் மாணவியர் பிளேஸ்பாளையத்தில் அவலம்

குடிநீர் குடம் சுமக்கும் மாணவியர் பிளேஸ்பாளையத்தில் அவலம்


ADDED : டிச 21, 2024 01:11 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிளேஸ்பாளையம் கிராமம். இந்த கிராமம், தமிழக-ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவியருக்கு குடிநீர் தேவைக்காக மாணவர்கள் சிலர், அரை கி.மீட்டர் துாரத்தில் உள்ள, குடிநீர் குழாயில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதியம், நான்கு சிறுமியர் இரண்டு பெரிய குடத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு, சிரமப்பட்டு துாக்கி வந்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

பள்ளி மாணவ, மாணவியரை வேலை செய்ய அனுமதிக்க கூடாது என, பள்ளி கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும், பெரிய குடங்களில் தண்ணீர் பிடித்து வரும் காட்சியால், பெற்றோர்கள் கடும் அதிருப்தியடைந்து உள்ளனர்.

எனவே, ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகம் பள்ளி வளாகத்தில் சுகாதார குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us