ADDED : ஜன 08, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவேற்காடு: கடந்த இரு தினங்களாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
பழவேற்காடு பகுதியிலும் கடல் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. கடல் அலைகள் 6 அடி உயரத்திற்கு எழும்பி ஆர்ப்பரிக்கின்றன.
கடல் சீற்றத்தினால் நேற்று மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்வதை தவிர்த்திருந்தனர். மீன்படி படகுகள், வலைகள் கடற்கரையில் ஓய்வெடுத்தன. மீன் இறங்குதளம் பகுதியும் பரபரப்பின்றி காணப்பட்டது.