sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 10, 2025 10:40 PM

Google News

ADDED : ஜன 10, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில், கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம் செயல்படுகிறது. தினமும், 10 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றும் திறன் கொண்டதாகும்.

பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால், தற்போது, தினமும், 3 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறதது. இந்நிறுவனத்தில், பல்வேறு பிரிவுகளில், 141 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இரண்டு மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கபடவில்லை எனக்கூறி, நேற்று, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினருடன் இணைந்து, தொழிலாளர்கள், தொழிற்சாலை நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது தொழிலாளர்கள் கூறியதாவது:

பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருக்கிறோம். இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால், பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை உள்ளது. ஒப்பந்ததாரர் இல்லாமல், சென்னை குடிநீர் வாரியம் நேரடியாக, தொழிற்சாலையை நடத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us