/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதடைந்த வேளாண் கிடங்கால் வீணாகும் விதைகள், உரங்கள்
/
பழுதடைந்த வேளாண் கிடங்கால் வீணாகும் விதைகள், உரங்கள்
பழுதடைந்த வேளாண் கிடங்கால் வீணாகும் விதைகள், உரங்கள்
பழுதடைந்த வேளாண் கிடங்கால் வீணாகும் விதைகள், உரங்கள்
ADDED : மே 08, 2025 02:31 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றிய அலுவலகம் பின்புறத்தில், வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் வாயிலாக ஒன்றிய விவசாயிகளுக்கு விதை நெல், வேர்க்கடலை, பயிறு வகை மற்றும் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
இதற்காக விதைகள் இருப்பு வைப்பதற்கு ஒரு கட்டடமும், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இருப்பு வைப்பதற்கு மற்றொரு கட்டடம் என இரண்டு கட்டடங்கள் உள்ளன.
இந்த கட்டடங்களை முறையாக பராமரிக்காததால், தற்போது கட்டடத்தின் தளம் சேதம் அடைந்துள்ளது. இதனால், மழை பெய்யும் போது மழைநீர் ஓழுகி கிடங்கு முழுதும் தண்ணீர் தேங்கி நிற்பதுடன், உயிர் மற்றும் விதை நெல் மழையில் நனைந்து வீணாகிறது.
இது தவிர, கட்டடத்தில் செடிகள் வளர்ந்தும், விரிசல் அடைந்தும் வருகின்றன. இதனால் கிடங்கிற்கு செல்லும் போது அங்கு பணிசெய்யும் பெண் பணியாளர்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
இதுதவிர மேற்கண்ட கிடங்கில் அடிக்கடி விஷ ஜந்துக்கள் உள்ளே புகுந்து விடுவதால் பணியாற்றும் ஊழியர்கள் கடும் அச்சப்படுகின்றனர்.
எனவே பழுதடைந்த வேளாண்மை கிடங்கு கட்டடங்களை சீரமைக்க வேண்டும் அல்லது அகற்றி அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என, கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.