sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இடிந்து விழும் நிலையில் சுயஉதவி குழு கட்டடம்

/

இடிந்து விழும் நிலையில் சுயஉதவி குழு கட்டடம்

இடிந்து விழும் நிலையில் சுயஉதவி குழு கட்டடம்

இடிந்து விழும் நிலையில் சுயஉதவி குழு கட்டடம்


ADDED : மார் 27, 2025 01:55 AM

Google News

ADDED : மார் 27, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிய நாகபூண்டி ஏரிக்கரை வழியாக ஆந்திர மாநிலம், கங்கம்மாபுரத்திற்கு தார்ச்சாலை வசதி உள்ளது. இந்த வழியாக ஏராளமானோர், ஆந்திர மாநிலம் திருநாதராஜபுரத்திற்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், பெரிய நாகபூண்டி ஏரிக்கரையை அடுத்து, கங்கம்மாபுரம் மற்றும் அம்மன் கோவில் கூட்டு சாலையில், மகளிர் சுயஉதவி குழு கட்டடம், அங்கன்வாடி மையம், ஊராட்சி நுாலகம் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.

இதில், மகளிர் சுயஉதவி குழு கட்டடம் பராமரிப்பு இன்றி சீரழிந்து கிடக்கிறது. இந்த கட்டடத்தின் கான்கிரீட் தளம் பெயர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், இந்த வழியாக செல்வோர், விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

எனவே, அப்பகுதிவாசிகளின் பாதுகாப்பு கருதி, மகளிர் சுயஉதவி குழு கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us