/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் வியாபாரிகள் மோதல் ஏழு பேர் படுகாயம்: மூன்று பேர் கைது
/
திருத்தணி கோவிலில் வியாபாரிகள் மோதல் ஏழு பேர் படுகாயம்: மூன்று பேர் கைது
திருத்தணி கோவிலில் வியாபாரிகள் மோதல் ஏழு பேர் படுகாயம்: மூன்று பேர் கைது
திருத்தணி கோவிலில் வியாபாரிகள் மோதல் ஏழு பேர் படுகாயம்: மூன்று பேர் கைது
ADDED : மே 02, 2025 02:26 AM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
கோவில் வளாகத்தில் மஞ்சள், குங்குமம், பூக்கடை, போட்டோ கடைகளில் தனிநபர்கள் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
வாகனம் நிறுத்தும் அருகே, திருத்தணி மலைக்கோவில் குருக்கள் தெருவை சேர்ந்த நடராஜன் ,58 என்பவர் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது கடை அருகில், மலைக்கோவில் ராஜகோபுரம் பகுதி சேர்ந்த மதுரா, 42 என்பவர் மஞ்சள், குங்குமம் வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே, வியாபாரம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, நடராஜன், மதுரா ஆகிய இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினரும் தனது ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் உருட்டை கட்டை மற்றும் கற்களால் தாக்கினர்.
இதில் நடராஜன், அவரது மகன் சரவணன், உறவினர் வெங்கடேசன், மதுரா, அவரது மனைவி அமுதா, மகன் அரி மற்றும் கடையில் வேலை செய்யும் நபர் என, ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மோதலில் ஈடுபட்ட, மோகன் ,21, சரவணன், 43, வெங்கடேசன், 24 ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும் ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.