sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.25 லட்சம் சிக்கியது

/

சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.25 லட்சம் சிக்கியது

சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.25 லட்சம் சிக்கியது

சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.25 லட்சம் சிக்கியது


ADDED : ஜூலை 14, 2025 11:37 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி,கும்மிடிப்பூண்டி சார் - பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய சோதனையில், 1.25 லட்சம் ரூபாய் சிக்கியது.

கும்மிடிப்பூண்டி சார் - பதிவாளர் அலுவலகத்தில், அதிக அளவில் லஞ்சம் பெற்று பத்திரப்பதிவு செய்து வருவதாக, சார் - பதிவாளர் சுரேஷ் மீது லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார்கள் சென்றன.

அதன்படி, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டி.எஸ்.பி., கணேஷ், இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா தலைமையிலான அத்துறையினர், நேற்று மாலை முதல் கும்மிடிப்பூண்டி சார் - பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்தனர்.

இரவு சார் - பதிவாளர் புறப்படும் நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர், அலுவலகம் மற்றும் அவரது காரை சோதனையிட்டனர். கார், கணினி அறை, ஆவண அறைகளில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 1.25 லட்சம் ரூபாய் சிக்கியது. சார் - பதிவாளர் சுரேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us