/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.25 லட்சம் சிக்கியது
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.25 லட்சம் சிக்கியது
சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.25 லட்சம் சிக்கியது
சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.25 லட்சம் சிக்கியது
ADDED : ஜூலை 14, 2025 11:37 PM
கும்மிடிப்பூண்டி,கும்மிடிப்பூண்டி சார் - பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய சோதனையில், 1.25 லட்சம் ரூபாய் சிக்கியது.
கும்மிடிப்பூண்டி சார் - பதிவாளர் அலுவலகத்தில், அதிக அளவில் லஞ்சம் பெற்று பத்திரப்பதிவு செய்து வருவதாக, சார் - பதிவாளர் சுரேஷ் மீது லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார்கள் சென்றன.
அதன்படி, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டி.எஸ்.பி., கணேஷ், இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா தலைமையிலான அத்துறையினர், நேற்று மாலை முதல் கும்மிடிப்பூண்டி சார் - பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்தனர்.
இரவு சார் - பதிவாளர் புறப்படும் நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர், அலுவலகம் மற்றும் அவரது காரை சோதனையிட்டனர். கார், கணினி அறை, ஆவண அறைகளில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 1.25 லட்சம் ரூபாய் சிக்கியது. சார் - பதிவாளர் சுரேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.