/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்போர் அறையின்றி அவதி
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்போர் அறையின்றி அவதி
சார் - பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்போர் அறையின்றி அவதி
சார் - பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்போர் அறையின்றி அவதி
ADDED : ஏப் 02, 2025 10:17 PM
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே, சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, தினமும் நுாற்றுக்கணக்கானோர் பத்திரப்பதிவு தொடர்பாக வந்து செல்கின்றனர்.
இங்கு வருவோர் பத்திரப்பதிவின் போது மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் மட்டும் அலுவலகத்தில் உள்ள சில இருக்கைளில் அமர்கின்றனர்.
நுாற்றுக்கணக்கானோர் அலுவலகத்தின் வெளிபுறம், அப்பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் எதிரே உள்ள மேம்பாலத்தின் கீழ் காத்திருக்கின்றனர். இதனால், முக்கிய ஆவணங்கள் மற்றும் பணத்துடன் வெளியே காத்திருப்பவர்கள், பாதுகாப்பு இல்லாத சூழலில் சுற்றித்திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி அலுவலக வளாகத்தில், காத்திருப்போர் அறை அமைத்து, போதிய இருக்கை வசதிகளும் ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.