sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 எஸ்.ஐ.ஆர்., திருத்தம் 3 நாள் சிறப்பு முகாம்

/

 எஸ்.ஐ.ஆர்., திருத்தம் 3 நாள் சிறப்பு முகாம்

 எஸ்.ஐ.ஆர்., திருத்தம் 3 நாள் சிறப்பு முகாம்

 எஸ்.ஐ.ஆர்., திருத்தம் 3 நாள் சிறப்பு முகாம்


ADDED : நவ 18, 2025 03:31 AM

Google News

ADDED : நவ 18, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், படிவம் பூர்த்தி செய்வதற்காக, இன்று முதல் மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. இதற்காக, ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தை வீடு வீடாகச் சென்று வழங்கி, பூர்த்தி செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வசதியாக, ஓட்டுச் சாவடி மையங்களில், இன்று முதல் வரும் 20ம் தேதி வரை, மூன்று நாட்கள், மாலை 3:00 மணி முதல் 6:00 மணி, வரை உதவி மையம் செயல்பட உள்ளது.

வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்புதல் தொடர்பான சந்தேகத்தை நிவர்த்தி செய்து அவற்றை பூர்த்தி செய்து வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us