/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
/
திருவள்ளூர் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
ADDED : ஜன 20, 2025 11:55 PM
திருவள்ளூர், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டி நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியருக்கு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், கவிதை, கட்டுரை, மற்றும் பேச்சு போட்டி நடைபெற உள்ளது.
முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு, முறையே 10,000, 7,000 மற்றும் 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், நாளை, திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும்; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 24ம் தேதி, திருவள்ளூர் டி.ஆர்.பி.சி., இந்து மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும்.
ஒரு பள்ளியிலிருந்து, ஒரு போட்டிக்கு, ஒரு மாணவர் வீதம், மூன்று மாணவர்களை மட்டும், தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.