sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் பெரியபாளையத்தில் பக்தர்கள் அவதி

/

சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் பெரியபாளையத்தில் பக்தர்கள் அவதி

சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் பெரியபாளையத்தில் பக்தர்கள் அவதி

சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் பெரியபாளையத்தில் பக்தர்கள் அவதி


UPDATED : ஆக 01, 2025 12:59 AM

ADDED : ஆக 01, 2025 12:58 AM

Google News

UPDATED : ஆக 01, 2025 12:59 AM ADDED : ஆக 01, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்களால், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

Image 1450463


பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் தற்போது ஆடி மாத விழா நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திராவில் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்வர்.

இங்கு வருபவர்கள் சனிக்கிழமை மாலை முதல் கோவிலுக்கு வரத்துவங்கி அங்கு தங்கி, மறுநாள் பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், வேப்ப இலை ஆடை அணிதல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனை வழிபடுவர்.



அதிகளவில் பக்தர்கள் வரும் நிலையில் இப்பகுதியில் சாலை வசதி கேள்விக்குறியாக உள்ளது. கோவில் அருகில் உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தை ஒட்டி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு உள்ளது. தார்சாலை அமைக்காததால், பக்தர்கள் இங்கு நடப்பதற்கு சிரமப்படுகின்றனர்.

எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பக்தர்கள் நலன் கருதி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட இடத்தில் தார்சாலை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us