sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறையால் மாணவியர் அவதி

/

ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறையால் மாணவியர் அவதி

ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறையால் மாணவியர் அவதி

ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறையால் மாணவியர் அவதி


ADDED : செப் 04, 2025 02:44 AM

Google News

ADDED : செப் 04, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில், போதுமான வகுப்பறைகள் இல்லாததால், மைதானத்தில் அமர்ந்து மாணவியர் பாடம் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

பொன்னேரி கல்வி மாவட்டம், ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் உள்ளது, அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி.

கடந்த 1999ல் துவக்கப்பட்ட இந்த பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட 29 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 700 மாணவியர் பயில்கின்றனர். இந்த பள்ளியில், 15 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இது போதுமானதாக இல்லை.

இதனால் மாணவியர் பாடம் கற்க, மைதானம், மரத்தடியில் அமரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக, தமிழக அரசு, அமைச்சர்கள், தி.மு.க., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் கூறும் நிலையில், ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் போதுமான அளவு வகுப்பறைகள் இல்லாத நிலை நீடிக்கிறது.

எனவே, தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும் நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேனிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us