/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மகளிர் குழு கட்டடத்தில் துணை சுகாதார நிலையம்
/
மகளிர் குழு கட்டடத்தில் துணை சுகாதார நிலையம்
ADDED : அக் 06, 2025 02:04 AM

திருத்தணி:மகளிர் குழு கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் இயங்கி வருவதால், சிகிச்சைக்கு வருவோர் கடும் சிரமப்படுகின்றனர்.
திருத்தணி ஒன்றியம் மத்துார் ஊராட்சிக்குட்பட்ட மூலமத்துார் கிராமத்தில் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் துணை சுகாதார நிலையம், ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. சொந்த கட்டடம் இல்லாததால், மகளிர் குழு கட்டடத்தில், குறுகிய இடத்தில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, போதிய இடவசதியில்லாததால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர் கடும் சிரமப்படுகின்றனர்.
துணை சுகாதார நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் பலமுறை கிராம சபை கூட்டம் மற்றும் கலெக்டரிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.
மகளிர் குழு கட்டடம் முறையாக பராமரிப்பு இல்லாததால், விரிசல் மற்றும் சேதமடைந்து வருகிறது. எனவே, மூலமத்துார் கிராமத்தில் கலெக்டர் ஆய்வு செய்து, துணை சுகாதார நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.