sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மனைவிக்கு சூடு வைத்த சந்தேக கணவன் கைது

/

மனைவிக்கு சூடு வைத்த சந்தேக கணவன் கைது

மனைவிக்கு சூடு வைத்த சந்தேக கணவன் கைது

மனைவிக்கு சூடு வைத்த சந்தேக கணவன் கைது


ADDED : ஜூன் 08, 2025 02:38 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 28. இவர், புதுகும்மிடிப்பூண்டியில், மனைவி புதுால், 27, இரண்டு பிள்ளைகளுடன் தங்கி, கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், புதுாலுக்கு, வடமாநில கட்டட தொழிலாளி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை ரஞ்சித்குமார் கண்டித்தும் புதுால் கேட்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், சில தினங்களாக, மனைவியை அடித்து துன்புறுத்தியும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்தி வந்து உள்ளார்.

நேற்று, தீக்காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக, புதுால் மருத்துவமனை செல்லும்போது, அருகில் வசிப்பவர்களுக்கு மேற்கண்ட சம்பவம் தெரியவந்தது. அதையடுத்து, அவர்கள் கும்மிடிபூண்டி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அங்கு சென்று, புதுாலை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us