sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

40 பனைமரங்கள் வெட்டியவர் மீது ஆரம்பாக்கம் போலீசில் தாசில்தார் புகார்

/

40 பனைமரங்கள் வெட்டியவர் மீது ஆரம்பாக்கம் போலீசில் தாசில்தார் புகார்

40 பனைமரங்கள் வெட்டியவர் மீது ஆரம்பாக்கம் போலீசில் தாசில்தார் புகார்

40 பனைமரங்கள் வெட்டியவர் மீது ஆரம்பாக்கம் போலீசில் தாசில்தார் புகார்


ADDED : டிச 28, 2024 08:50 PM

Google News

ADDED : டிச 28, 2024 08:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:தமிழக சட்டசபையில், 110 விதியின்கீழ் பனை மரத்தை வெட்டக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படி பனை மரம் வெட்ட வேண்டும் என்றால், கலெக்டர் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும். பனை மரத்தை வெட்டினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என, மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே ஓபசமுத்திரம் கிராமத்தில், இம்மாதம், 14ம் தேதி, ஊராட்சி அலுவலகம் நிறுவும் பணிக்காக, தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த, 40 பனை மரங்களை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக வேரோடு அகற்றப்பட்டன.

வனத் துறையினர் கள ஆய்வில், கிராம முக்கியஸ்தர், ஒப்பந்ததாரர், பி.டி.ஓ., அலுவலக பொறியாளர் உள்ளிட்டோர் முறையான அனுமதி இன்றி பனை மரங்களை அகற்றியது தெரிய வந்தது. அதன் மீதான அறிக்கையை மாவட்ட வன அலுவலருக்கு சமர்ப்பித்தனர்.

கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரவணகுமாரி, நேற்று முன்தினம், பனை மரங்களை அழித்த, நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் வாபஸ்


இந்நிலையில், நேற்று அந்த புகாரை, கிராம நிர்வாக அலுவலர் வாயிலாக, தாசில்தார் திருப்ப பெற்றுக் கொண்டார்.

இது குறித்து வருவாய் துறை வட்டாரங்கள் கூறுகையில், 'அகற்றிய, 40 பனை மரங்களுக்கு பதிலாக, ஓபசமுத்திரம் கிராமத்தில், 400 பனை செடிகள் நடுவதாக சம்பந்தப்பட்ட நபர்கள் தெரிவித்திருத்தனர். அதன்படி நேற்று, ஓபசமுத்திரம் கிராமம் முழுதும், 400 பனை செடிகள் நடப்பட்டதால், புகார் திருப்ப பெறப்பட்டதாக' கூறப்படுகிறது.

இது குறித்து பனை ஆர்வலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் நான்கு இடங்களில் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டியதற்காக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என, மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பனை மரங்களை வெட்டக்கூடாது என, விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us