sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீரராகவர் கோவிலில் தை தேரோட்டம் 'கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

/

வீரராகவர் கோவிலில் தை தேரோட்டம் 'கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

வீரராகவர் கோவிலில் தை தேரோட்டம் 'கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

வீரராகவர் கோவிலில் தை தேரோட்டம் 'கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்


ADDED : ஜன 31, 2025 02:08 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது.

நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் ஏழாவது நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது. அதற்காக, அதிகாலை, உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தேருக்கு எழுந்தருளினார்.

காலை 7:30 மணிக்கு, தேர் புறப்பாடு துவங்கியது. பொக்லைன் இயந்திரம் வாயிலாக தேர் இழுக்கப்பட்டு, குளக்கரை தெரு, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி வழியாக ஊர்வலமாக சென்று, மீண்டும் நிலையை அடைந்தது.

வழியெங்கும் பக்தர்கள் கூடி, 'வீரராகவா, கோவிந்தா' சரணம் முழங்க, பெருமாளை வழிபட்டனர்.

தேரில் மாலை வரை அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் திருமஞ்சனம் நடந்த பின், இரவு கோவிலுக்குள் திரும்பினார்.

பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான இன்று மாலை, திருப்பாதம் சாடி திருமஞ்சனமும், இரவு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறும்.






      Dinamalar
      Follow us