/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி வள்ளலார் கோவிலில் 25ல் தைப்பூசம்
/
திருத்தணி வள்ளலார் கோவிலில் 25ல் தைப்பூசம்
ADDED : ஜன 20, 2024 11:27 PM
திருத்தணி திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை எதிரில் வள்ளலார் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம் விழா நடந்து வருகிறது. நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும், 25ம் தேதி தைப்பூசம் - அருட்பெருஞ்ஜோதி தரிசன வழிபாடு நடக்கிறது.
அன்று காலை, 6:00 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றுதல், காலை, 6:30 மணிக்கு அகல் பாராயணம், காலை, 7:30 மணிக்கு சன்மார்க்க கொடி கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு திருவருட்பா பாடல்கள் இசை நிகழ்ச்சி, மதியம், 12:10 மணிக்கு, ஏழு திரைகள் அகற்றி அருட்பெருஞ்ஜோதி தரிசனம், இரவு 7:00 மணிக்கு மகாதீப ஆராதனையுடன் தைப்பூச பெருவிழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் பூங்காவனம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

