sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மருத்துவமனை கட்டி இரண்டு ஆண்டாச்சு! பயன்பாட்டிற்கு வருவது எப்போது ஆபீசர்?

/

மருத்துவமனை கட்டி இரண்டு ஆண்டாச்சு! பயன்பாட்டிற்கு வருவது எப்போது ஆபீசர்?

மருத்துவமனை கட்டி இரண்டு ஆண்டாச்சு! பயன்பாட்டிற்கு வருவது எப்போது ஆபீசர்?

மருத்துவமனை கட்டி இரண்டு ஆண்டாச்சு! பயன்பாட்டிற்கு வருவது எப்போது ஆபீசர்?

1


ADDED : மே 01, 2025 01:47 AM

Google News

ADDED : மே 01, 2025 01:47 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை மற்றும் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் திருமழிசை பேரூராட்சி அமைந்துள்ளது.

தற்போது, சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை, ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றும் வகையில், தமிழக அரசு சார்பில், 2022ம் ஆண்டு, 'நம்மை காப்போம் - 48' மருத்துவ திட்டத்தின் கீழ், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருமழிசையில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மருத்துவமனை கட்டப்பட்டது.

இந்த மருத்துவமனை கட்டப்பட்டு இரு ஆண்டுகளாகியும், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், திருமழிசையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது:

விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மருத்துவமனைக்கு, தற்போது சாலை வசதி மட்டும் நிறைவு பெற்றுள்ளது. மேலும் சுற்றுச்சுவர், மின் இணைப்பு, லிப்ட் வசதி மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற பணிகள் நிறைவடைந்தவுடன், பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us