/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடைகள் ஓய்வெடுக்கும் கூவம் ஆற்று மேம்பாலம்
/
கால்நடைகள் ஓய்வெடுக்கும் கூவம் ஆற்று மேம்பாலம்
ADDED : ஏப் 06, 2025 11:16 PM

பேரம்பாக்கம்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது பேரம்பாக்கம் ஊராட்சி. இப்பகுதியில், கூவம் ஆற்று மேம்பாலத்தை வழியாக, தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், பூந்தமல்லி மற்றும் அரக்கோணம் பகுதிக்கு செல்கின்றன.
இந்நிலையில், பேரம்பாக்கம், இருளஞ்சேரி உட்பட பல பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், கூவம் ஆற்று மேம்பாலத்தில் இளைப்பாறுகின்றன. இதனால், இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மேம்பாலம் பகுதியில் இளைப்பாறும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.