sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 இணைப்பு சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

/

 இணைப்பு சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

 இணைப்பு சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

 இணைப்பு சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்


ADDED : ஜன 01, 2026 05:08 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவரம்: ஆத்துாரில் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, கரடு முரடாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.

சோழவரம் அடுத்த ஆத்துார் கிராமத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலை சேதமடைந்து உள்ளது. சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டும், ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளன. இதனால், சாலை பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர்.

நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது, அவற்றின் கீழ்பகுதி பள்ளங்களில் சிக்கி தவிப்பதுடன், உதிரிபாகங்களும் பழுதாகின்றன. இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து சிறு சிறு விபத்துகளுக்கு உள்ளாகின்றனர்.

இணைப்பு சாலை சேதமடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், தேவனேரி, ஆத்துார், பழைய எருமைவெட்டிப்பாளையம், புதிய எருமைவெட்டிப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, இணைப்பு சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us