sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சகதியான சர்க்கரை ஆலை வளாகம் கரும்பு ஏற்றி வந்த வாகன ஓட்டிகள் அவதி

/

சகதியான சர்க்கரை ஆலை வளாகம் கரும்பு ஏற்றி வந்த வாகன ஓட்டிகள் அவதி

சகதியான சர்க்கரை ஆலை வளாகம் கரும்பு ஏற்றி வந்த வாகன ஓட்டிகள் அவதி

சகதியான சர்க்கரை ஆலை வளாகம் கரும்பு ஏற்றி வந்த வாகன ஓட்டிகள் அவதி


ADDED : டிச 13, 2024 02:19 AM

Google News

ADDED : டிச 13, 2024 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காடில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் திருத்தணி, அரக்கோணம் உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகின்றன.

இந்தாண்டு, 2 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நவம்பர் இறுதியில் அரவை துவங்கியது. தினமும் ஆலைக்கு டிராக்டர் லாரி என 90 வாகனங்களில் கரும்பு அரவை செய்ய கொண்டு வரப்படுகிறது.

தற்போது ஆலை வளாக பகுதி மண் தரையாக உள்ளதால், தொடர்ந்து பெய்து வரும் மழையால் சகதியாக காட்சியளிக்கிறது.

இது குறித்து, டிராக்டரில் கரும்பு ஏற்றி வந்த திருத்தணியைச் சேர்ந்த ராமச்சந்திரன் கூறியதாவது:

ஆலை வளாகத்தில் சகதியாக உள்ளதால், டிராக்டர் சிக்கி கவிழ்ந்து விடும் அபாயம் இருப்பதுடன், சில நேரங்களில் டிராக்டர்கள் பழுதடைகிறது.

இதனால் கரும்பு ஏற்றி வரும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். இதனால், ஆலையில் அரவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்னை உள்ளதால் சிமென்ட் தரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us