sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

12 ஆண்டுகளாகியும் பயன்பாடின்றி ஆட்டிறைச்சி கூடம் திருமழிசையில் குப்பை கிடங்காக மாறி வரும் அவலம்

/

12 ஆண்டுகளாகியும் பயன்பாடின்றி ஆட்டிறைச்சி கூடம் திருமழிசையில் குப்பை கிடங்காக மாறி வரும் அவலம்

12 ஆண்டுகளாகியும் பயன்பாடின்றி ஆட்டிறைச்சி கூடம் திருமழிசையில் குப்பை கிடங்காக மாறி வரும் அவலம்

12 ஆண்டுகளாகியும் பயன்பாடின்றி ஆட்டிறைச்சி கூடம் திருமழிசையில் குப்பை கிடங்காக மாறி வரும் அவலம்


ADDED : டிச 30, 2024 01:32 AM

Google News

ADDED : டிச 30, 2024 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருமழிசை -- ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள சுடுகாடு அருகே, 2012ம் ஆண்டு, 20 லட்சம் ரூபாய் செலவில், நவீன ஆட்டிறைச்சிக் கூடம் கட்டப்பட்டது.

இதன் வாயிலாக திருமழிசை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடை வியாபாரிகள் பயன்பெறும் வகையில் கட்டி முடிக்கப்பட்டு, 11 ஆண்டுகளாகியும், நவீன இயந்திரங்கள் இல்லாமல் பயன்பாட்டிற்கு வராததால், வீணாகி வந்தது.

இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் ஆட்டிறைச்சி கூடத்தை, 2022ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், பயன்பாட்டிற்கு வரும் வகையில், 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டு சீரமைக்கப்பட்டன.

சீரமைக்கப்பட்டு, இரு ஆண்டுகளாகியும் ஆட்டிறைச்சி கூடம் இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.

இதனால் மக்கள் வரிப்பணம், 37 லட்சம் ரூபாய் வீணாகி வருவதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஆட்டிறைச்சி கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, திருமழிசை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆட்டிறைச்சி கூடத்தை சீரமைத்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us