sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் திருமழிசை மக்கள் கடும் அவதி

/

 நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் திருமழிசை மக்கள் கடும் அவதி

 நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் திருமழிசை மக்கள் கடும் அவதி

 நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் திருமழிசை மக்கள் கடும் அவதி


ADDED : டிச 01, 2025 03:36 AM

Google News

ADDED : டிச 01, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால், அடிப்படை தேவைகளுக்கு மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

திருமழிசை பேரூராட்சியில், 15 வார்டுகளில் 25,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த வெங்கடேஷ், 60, என்பவர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் சதீஷ் என்பவர், திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலராக கூடுதலாக கவனித்து வருகிறார்.

இரு பேரூராட்சிகளையும் கவனித்து வருவதால், திருமழிசை பகுதி மக்கள், தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து கூறவும், மனுக்களை செயல் அலுவலரிடம் நேரில் கொடுக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், வாரத்தில் குறிப்பிட்ட நாளில் மட்டும் அலுவலகத்திற்கு வரும் செயல் அலுவலைரை, பகுதிமக்கள் நேரில் சந்திக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே, திருமழிசை பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலரை நியமித்து, மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us