/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 418 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 418 மனுக்கள் ஏற்பு
ADDED : நவ 12, 2024 07:30 AM
திருவள்ளூர் : திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 418 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 133, சமூக பாதுகாப்பு திட்டம் 64, வேலைவாய்ப்பு வேண்டி 45, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 75, இதர துறை 101 என மொத்தம் 418 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.