sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

40 பனைமரங்களை வெட்டியவர் கைது

/

40 பனைமரங்களை வெட்டியவர் கைது

40 பனைமரங்களை வெட்டியவர் கைது

40 பனைமரங்களை வெட்டியவர் கைது


ADDED : நவ 09, 2024 02:02 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சி பூஞ்சோலை நகர் பகுதியில் ஓடைக்கு செல்லும் சாலை உள்ளது.

இங்கு, சாலையோரத்தில் இருந்த, 80 ஆண்டு கள் பழமையான, 40க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பொக்லைன், இயந்திரத்தின் உதவியுடன் கடந்த மாதம் 10ம் தேதி வெட்டி சாய்க்கப்பட்டது.

இதுகுறித்து பகுதிவாசிகள் சின்னம்மாபேட்டை வி.ஏ.ஓ., இளங்கோவிடம் புகார் அளித்தனர். விசாரணையில் பனை மரங்களைவெட்டியவர் அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்,49 என்பது தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 16ம் தேதி திருவாலங்காடு காவல் நிலையத்தில் பனை மரங்களை வெட்டிய ஆறுமுகத்தின் மீது வி.ஏ.ஓ., புகார்அளித்தார்.

வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் ஆறுமுகத்தை தேடி வந்த நிலையில் நேற்று காலை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவாரூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டி ஒன்றியம் குன்னலூர்கிராமத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத்தலைவரின் கணவரானபூமிநாதன் என்பவர், ஹிந்து அறநிலைத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் வளர்ந்த பனை மரங்களை வெட்டினார்.

இது தொடர்பாக வி.ஏ.ஓ., அளித்த புகாரின்படி எடையூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.

தமிழகத்தில் முதல்முறையாக பனை மரத்தை வெட்டிய குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின் திருவாலங்காடு காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கேஇரண்டாவதாகும்.






      Dinamalar
      Follow us