ADDED : பிப் 24, 2024 07:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம்:விழுப்புரம் மாவட்டம், தேன்கோளப்பாக்கம், புதிய காலனியைச் சேர்ந்தவர் குமார், 50. கடந்த ஆறு மாதத்திற்கு முன் தன் மனைவி மகேஸ்வரியுடன் தாமரைப்பாக்கம் பகுதியில் குடியேறினார். கிரேன் ஓட்டுனராக பணியாற்றி வந்த இவர் கடந்த, 20ம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தாமரைப்பாக்கம் அரசு மதுபானக் கடை அருகே, கால்வாயில், 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக வெங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, காணாமல் போன குமார் என்பது தெரியவந்தது. போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.