sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மேம்பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் தவிப்பு

/

மேம்பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் தவிப்பு

மேம்பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் தவிப்பு

மேம்பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் தவிப்பு


ADDED : பிப் 08, 2024 11:27 PM

Google News

ADDED : பிப் 08, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஜனப்பசத்திரம் - காரனோடை இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆற்றுப்பாலம் அமைந்து உள்ளது.

சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இந்த பாலம் அமைந்திருப்பதால், நாள் முழுதும் வாகன போக்குவரத்து இருக்கிறது.

சவுடு, மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளில் இருந்து சிதறுபவை, பாலத்தின் ஓரங்களில் குவிகிறது. இது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகிறது.

தற்போது பாலத்தின் இருபுறம் குவிந்து கிடக்கும் மண் குவியல்கள், காற்றில் பறந்து புழுதியாக பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.

மேலும் கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பாலத்தில் குவியும் மண்ணை அவ்வப்போது அகற்றி, பராமரிப்பதில் தேசிய நெடுஞ்சாலையினர் அக்கறை காட்டுவதில்லை என வாகன ஓட்டிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

மேற்கண்ட பாலத்தின் ஓரங்களில் குவிந்திருக்கும் மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us