sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கழிவுநீர் குளமாகிய சாலை நடக்க முடியாமல் திணறல்

/

கழிவுநீர் குளமாகிய சாலை நடக்க முடியாமல் திணறல்

கழிவுநீர் குளமாகிய சாலை நடக்க முடியாமல் திணறல்

கழிவுநீர் குளமாகிய சாலை நடக்க முடியாமல் திணறல்


ADDED : அக் 08, 2025 02:34 AM

Google News

ADDED : அக் 08, 2025 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:திருமழிசை குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.

திருமழிசை பேரூராட்சி அலுவலகம் அருகே ஜெகந்நாத பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள தெற்கு மாடவீதி சாலை பல இடங்களில் சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசி வருகிறது. அப்பகு தி மக்கள், பள்ளி மாணவ- - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அருகிலேயே பேரூராட்சி அலுவலகம் இருந்தும், சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, திருமழிசை பேரூராட்சியில் ஆய்வு செய்து, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us