sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பேருந்து பணிமனை திட்டம் அம்போ கழிவுநீர் குட்டையாக மாறிய அவலம்

/

பேருந்து பணிமனை திட்டம் அம்போ கழிவுநீர் குட்டையாக மாறிய அவலம்

பேருந்து பணிமனை திட்டம் அம்போ கழிவுநீர் குட்டையாக மாறிய அவலம்

பேருந்து பணிமனை திட்டம் அம்போ கழிவுநீர் குட்டையாக மாறிய அவலம்


ADDED : ஏப் 03, 2025 02:49 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்மணம்பாக்கம்:மாநகர பேருந்து பணிமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், கட்டுமான பணி இதுவரை நடைபெறாததால், கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பணிமனையில் இருந்து, சுற்றியுள்ள கிராமங்களுக்கு நகர பேருந்துகளும், விரைவு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இம்மாவட்டத்தில் இருந்து பலரும் வேலை, மருத்துவம், பள்ளி, கல்லுாரி மற்றும் அத்தியாவசிய தேவைக்காக, சென்னைக்கு சென்று வருகின்றனர். இதையடுத்து, 2009ம் ஆண்டு முதல் சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள், இம்மாவட்டத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன.

வடபழனி, தாம்பரம், ஆவடி, அம்பத்துார், பிராட்வே, தி.நகர், கோயம்பேடு, ஸ்ரீபெரும்புதுார், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 54 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனால், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். ஆனால், திருவள்ளூரில் மாநகர பேருந்து பணிமனை இதுவரை அமைக்காததால், தற்போது பூந்தமல்லி, அம்பத்துார், ஆவடி, கே.கே.நகர், பாடியநல்லுார் பகுதிகளில் இருந்து தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால், காலை 6:30 மணிக்கு மேல் தான் சென்னைக்கு புறப்படுகின்றன. மேலும், இரவு 8:00 மணி வரை மட்டுமே மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூரில் மாநகர பேருந்து பணிமனை இல்லாததே இதற்கு காரணம்.

இதையடுத்து பணிமனைக்காக, 2013ல் திருவள்ளூர் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில், 5.5 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்கீடு செய்தது. இடம் ஒதுக்கி 12 ஆண்டுகளாகியும், தற்போது வரை பணிமனை கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

இதனால், அதிகாலை நேரத்தில் சென்னைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், அந்த இடத்திற்கு அருகில் கழிவுநீர் குளம் போல் தேங்கி, துர்நாற்றம் வீசுவதுடன், பன்றிகள் குட்டையில் சூழ்ந்துள்ளதால், சுற்றுச்சூழலும் மாசடைந்து வருகிறது.

எனவே, சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகத்தினர், உடனடியாக அம்மணம்பாக்கம் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட 5.5 ஏக்கர் நிலத்தில் போக்குவரத்து பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us