/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் படகில் சடலத்தை எடுத்து சென்ற அவலம்
/
சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் படகில் சடலத்தை எடுத்து சென்ற அவலம்
சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் படகில் சடலத்தை எடுத்து சென்ற அவலம்
சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் படகில் சடலத்தை எடுத்து சென்ற அவலம்
ADDED : நவ 06, 2025 03:23 AM

பழவேற்காடு: பழவேற்காடு மீனவ கிராமத்தில், சுடுகாட்டிற்கு செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லாததால், அங்குள்ள கழிமுகப் பகுதியை கடக்க, படகில் சடலத்தை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழவேற்காடு, கோட்டைகுப்பம் மீனவ கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியினருக்கான சுடுகாட்டிற்கு செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லை. அங்குள்ள ஏரியின் கழிமுகப்பகுதியை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.
சுடுகாட்டிற்கு உரிய சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, மீனவ கிராமத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நேற்று, கோட்டைகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், கழிமுக பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்ததால், அவரது சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர். பின், சடலத்தை படகில் ஏற்றி, கழிமுக பகுதியின் மறுகரைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து தோளில் சுமந்து, சுடுகாட்டிற்கு கொண்டு சென்று இறுதி சடங்குகளை செய்தனர்.
இதுகுறித்து, மீனவ கிராமத்தினர் கூறியதாவது:
சுடுகாட்டிற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாமல், மழைக்காலங்களில் பெரும் சிரமப்பட்டு வருகிறோம்.
தண்ணீர் குறைவாக இருக்கும் நேரங்களில், இறந்தவர்களின் சடலங்களை தோளில் சுமந்து சேற்றிலும், முள்செடிகளிலும் சிக்கி, சிரமத்துடன் கொண்டு செல்கிறோம். தண்ணீர் அதிகம் இருந்தால், படகில் தான் இறந்தவர்களுக்கு இறுதிப் பயணமாக உள்ளது.
எனவே, கோட்டைகுப்பம் கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு செல்ல தரைப்பாலம் அமைத்து, சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

