sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பராமரிப்பில்லாத வாசீஸ்வரர் கோவில் குளம் குப்பை கிடங்காக மாறி வரும் அவலம்

/

பராமரிப்பில்லாத வாசீஸ்வரர் கோவில் குளம் குப்பை கிடங்காக மாறி வரும் அவலம்

பராமரிப்பில்லாத வாசீஸ்வரர் கோவில் குளம் குப்பை கிடங்காக மாறி வரும் அவலம்

பராமரிப்பில்லாத வாசீஸ்வரர் கோவில் குளம் குப்பை கிடங்காக மாறி வரும் அவலம்


ADDED : நவ 28, 2024 12:30 AM

Google News

ADDED : நவ 28, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சூர்:

27.11.2024/கடம்பத்துார் /தி.நடராஜசிவா/ 7904308590/ கீ:1145 / 1:00 ****


திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அமைந்துள்ளது ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில்.

இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. தற்போது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்தும் இந்த குளத்தில் ஒரு சொட்டு நீர் இல்லாதது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் குளத்திற்கு வரும் வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமல் துார்ந்து போனதால், குளத்திற்கு நீர் வருவது, தடைபட்டுள்ளது என பக்தர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை பக்தர்கள் புகார் அளித்தும் அறநிலையத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குளம் வறண்டு கிடப்பதால் விளையாட்டு மைதானமாகவும், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும், முட்புதர்கள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இது பக்தர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் வாசீஸ்வரர் சுவாமி கோவில் குளத்திற்கு நீர் சேகரமாகும் வகையில் சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us