/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாமரை ஏரியை சூழ்ந்துள்ள கழிவுகள் ஏரி மாசு அடைந்து நிலத்தடி நீர் சீரழிவு
/
தாமரை ஏரியை சூழ்ந்துள்ள கழிவுகள் ஏரி மாசு அடைந்து நிலத்தடி நீர் சீரழிவு
தாமரை ஏரியை சூழ்ந்துள்ள கழிவுகள் ஏரி மாசு அடைந்து நிலத்தடி நீர் சீரழிவு
தாமரை ஏரியை சூழ்ந்துள்ள கழிவுகள் ஏரி மாசு அடைந்து நிலத்தடி நீர் சீரழிவு
ADDED : ஆக 27, 2025 02:28 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியை சுற்றி கழிவுகளும், கழிவுநீரும் விடப்படுவதால் ஏரி நிர் மாசு அடைந்து நிலத்தடி நீரின் தன்மை வெகுவாக பாதித்து வருகிறது.
கும்மிடிப்பூண்டி அருண் நகரில், 48 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் தாமரை ஏரி, நீர்வளத்துறையினர் பராமரிப்பில் உள்ளது. ந கரின் ஒரே நீராதாரம் தற்போது கழிவுகள் மற்றும் கழிவுநீர் கலந்து மிகவும் மாசு அடைந்து உள்ளது.
ஒரு புறம் டேங்கர் லாரி கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதால் ஏரி நீர் மாசு அடைந்து ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளது.
மறுபுறம், ஏரியை சுற்றி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மற்றும் பெத்திக்குப்பம் ஊராட்சியின் குடியிருப் பு மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. அதன் கழிவுகள் ஏரியை சுற்றி குவிப்பதும், கழிவுநீரை நேரடியாக ஏரியில் திறந்து விடுவதும் தொடர் கதையாக உள்ளது.
இதனால் தாமரை ஏரியின் உட்புறமும், வெளிபுறமும் முற்றிலும் மாசு அடைந்துள்ளது.
அழிவின் விளிம்பில் உள்ள ஏரியை மீட்டெடுக்க வேண்டும், அதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், நீர்வளத்துறையினரும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.