sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொடர் நீர்வரத்தால் உயர்ந்து வரும் பிச்சாட்டூர் ஏரி நீர்மட்டம்

/

தொடர் நீர்வரத்தால் உயர்ந்து வரும் பிச்சாட்டூர் ஏரி நீர்மட்டம்

தொடர் நீர்வரத்தால் உயர்ந்து வரும் பிச்சாட்டூர் ஏரி நீர்மட்டம்

தொடர் நீர்வரத்தால் உயர்ந்து வரும் பிச்சாட்டூர் ஏரி நீர்மட்டம்


ADDED : டிச 22, 2024 01:11 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலத்தில், ஆரணி ஆற்றின் நடுவே பிச்சாட்டூர் கிராமத்தில் உள்ள ஏரி, 1.85 டி.எம்.சி., நீர் கொள்ளளவை கொண்டது. இதன் நீர்மட்டம், 31 அடி. மழைநீர் முக்கிய நீர் ஆதாரம். வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததால், பெய்த பலத்த மழையால், ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

ஒரு கட்டத்தில் வினாடிக்கு, 5,400 கன அடி நீர் வரை வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம், 'கிடுகிடு'வென உயர்ந்தது. தொடர் நீர்வரத்தால், முழு கொள்ளளவை அடையும் நிலை ஏற்பட்டதால், வினாடிக்கு, 5,400 கன அடி வரை உபரிநீர் மதகு வழியே திறந்து வெளியேற்றப்பட்டது.

தற்போது, மழை நின்றதால் நீர்வரத்து பெருமளவு குறைந்தது. நேற்று, காலை 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

இங்கிருந்து, வினாடிக்கு 470 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. ஏரியில் தற்போது 1.726 டி.எம்,சி., நீர்மட்டம், 30.10 அடி. இங்கிருந்து திறந்து விடப்படும் உபரிநீர் தமிழகத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us