sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஷட்டரை வெட்டி எடுத்து  டாஸ்மாக் கடையில் திருட்டு

/

ஷட்டரை வெட்டி எடுத்து  டாஸ்மாக் கடையில் திருட்டு

ஷட்டரை வெட்டி எடுத்து  டாஸ்மாக் கடையில் திருட்டு

ஷட்டரை வெட்டி எடுத்து  டாஸ்மாக் கடையில் திருட்டு


ADDED : டிச 10, 2024 12:55 AM

Google News

ADDED : டிச 10, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் அருகே, நேமளூர் கிராமத்தில், டாஸ்மாக் கடை எண்:8,743 இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, முகத்தை மறைத்தபடி கையுறை அணிந்து, பேட்டரியால் இயங்கக்கூடிய கட்டிங் மிஷினுடன் மர்ம நபர் ஒருவர் வந்தார்.

டாஸ்மாக் கடையின் ஷட்டர் பூட்டுகளை கட்டிங் மிஷினால் துண்டித்த அவரால், ஷட்டர் நடுவே உள்ள லாக்கை உடைக்க முடியாமல் போனது. அவர் எடுத்து வந்த கட்டிங் மிஷின் கொண்டு, ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவிற்கு ஷட்டரை வெட்டி எடுத்துள்ளார்.

பின், ஷட்டருக்கு அடுத்து இருந்த கிரில் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அங்கிருந்து காலி மதுபான பெட்டியில் வைத்திருந்த விற்பனை பணம், 11,750 ரூபாயை திருடி சென்றார்.

கடையில் இருந்த மதுபானங்கள் திருடு போனதா என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

கட்டிங் மிஷின் கொண்டு டாஸ்மாக் கடையில் நடத்தப்பட்ட இந்த திருட்டு குறித்து, வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், மதுக்கடையின் கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us