/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் தொழிற்சாலையில் மின்சாதன பொருட்கள் திருட்டு
/
தனியார் தொழிற்சாலையில் மின்சாதன பொருட்கள் திருட்டு
தனியார் தொழிற்சாலையில் மின்சாதன பொருட்கள் திருட்டு
தனியார் தொழிற்சாலையில் மின்சாதன பொருட்கள் திருட்டு
ADDED : நவ 26, 2025 04:56 AM
மப்பேடு: மப்பேடு அருகே தனியார் தொழிற்சாலையில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் திருடு போனது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மப்பேடு அடுத்த கோவிந்தமேடு பகுதியில் அமைந்துள்ளது டி.ஜி.ஐ. பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட். இங்கு காப்பர் வயர் மற்றும் டிரில்லிங் மிஷன் உட்பட 2.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மாயமானது. 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்த போது நேற்று முன்தினம் அதிகாலை தொழிற்சாலையில் பணி செய்து வந்த மூன்று பேர் பொருட்களை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து, நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி சிவசங்கர் அளித்த புகாரின்படி மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

