sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் அதிகரிக்கும் திருட்டு மர்மநபர்கள் நடமாட்டத்தால் பீதி

/

திருத்தணியில் அதிகரிக்கும் திருட்டு மர்மநபர்கள் நடமாட்டத்தால் பீதி

திருத்தணியில் அதிகரிக்கும் திருட்டு மர்மநபர்கள் நடமாட்டத்தால் பீதி

திருத்தணியில் அதிகரிக்கும் திருட்டு மர்மநபர்கள் நடமாட்டத்தால் பீதி


ADDED : அக் 06, 2024 08:33 PM

Google News

ADDED : அக் 06, 2024 08:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி நகர் பகுதியில் இரு மாதங்களாக மர்ம நபர்கள் நடந்து செல்லும் மக்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்பவர்களிடம் நகை, பணம் மற்றும் மொபைல்போன்கள் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

கடந்த வாரம் திருத்தணி பேருந்து நிலையத்தில் காத்திருந்த மூன்று பயணியரிடம் மொபைல்போன், பணம் பறிப்பு போன்ற சம்பவம் பட்டப்பகலிலேயே நடந்தது.

மேலும், பெண்கள் தனியாக நடந்து செல்லும் போது பணம் மற்றும் மொபைல்போன் போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் பொதட்டூர்பேட்டை அடுத்த சொராக்காய்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி ஈஸ்வரி, 40, என்பவர், சென்னையில் சிகிச்சை பெற்று விட்டு, இரவு 7:00 மணிக்கு மின்சார ரயில் வாயிலாக, திருத்தணிக்கு வந்தார்.

தொடர்ந்து, தனது கிராமத்திற்கு செல்வதற்காக, கமலா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறினார்.

பேருந்தில் அதிகளவில் பயணிகள் இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், ஈஸ்வரியின் கைபையில் வைத்திருந்த, 3,000 ரூபாய், மொபைல் போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து ஈஸ்வரி அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால், திருத்தணி மக்கள் பீதியில் உள்ளனர்.

எனவே, மாவட்ட எஸ்.பி., திருத்தணி காவல் நிலையத்தில் செயல்படாமல் உள்ள குற்றப்பிரிவை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us