
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி,திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்ற ரொக்கம், தங்கம், வெள்ளி போன்ற காணிக்கைகளை மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர்.
அந்த வகையில், கடந்த 25 நாட்களில் பக்தர்கள் அளித்த காணிக்கை நேற்று மலைக்கோவிலில் கோவில் சேர்மன் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் எண்ணினர்.
இதில், 1 கோடியே, 19 லட்சத்து, 36,528 ரூபாய் ரொக்கம், 233 கிராம் தங்கம், 5,128 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.

