sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி கோவில் ராஜகோபுரம் வாசற்கல் அமைக்கும் பணி விறுவிறு

/

திருத்தணி கோவில் ராஜகோபுரம் வாசற்கல் அமைக்கும் பணி விறுவிறு

திருத்தணி கோவில் ராஜகோபுரம் வாசற்கல் அமைக்கும் பணி விறுவிறு

திருத்தணி கோவில் ராஜகோபுரம் வாசற்கல் அமைக்கும் பணி விறுவிறு


ADDED : மார் 06, 2024 10:03 PM

Google News

ADDED : மார் 06, 2024 10:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 2009ம் ஆண்டு நவ., 18ம் தேதி 123 அடி உயரமுள்ள ராஜகோபுரம், 3.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு, பணி துவங்கியது. இரு ஆண்டுகளுக்கு முன் ராஜகோபுரம் பணி முழுமையாக முடிந்து வண்ணம் தீட்டப்பட்டது.

தொடர்ந்து, ராஜகோபுரத்தில் இருந்து மலைக்கோவில் தேர்வீதிக்கு இணைப்பு படிகள் மற்றும் ராஜகோபுரம் வாசற்கற்கள் பதிக்கும் பணி பல மாதங்களாக துவக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து, கடந்தாண்டு உபயதாரர் வாயிலாக வாசற்கற்கள் பெறப்பட்டு, கற்களில் 'வேல் மற்றும் முருகா...' என்ற ஓவியம் வரையப்பட்டது. ஆனால், வாசற்கற்கள் பொருத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இதுகுறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நேற்று முன்தினம் ராஜகோபுரத்திற்கு வாசற்கற்கள் பதிக்கும் பணி துவங்கியது.

இப்பணிகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.






      Dinamalar
      Follow us