/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா
/
மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா
ADDED : ஆக 01, 2011 01:51 AM
பொன்னேரி : பொன்னேரி கிளை நூலகம் வாசகர் வட்டத்தின் சார்பில், புத்தக வங்கி இயங்குகிறது.
நடப்பு கல்வியாண்டில், பொறியியல் மற்றும் கலை படிப்புகள் பயிலும் மாணவர்களுக்காக புத்தகம் வழங்கும் விழா நடந்தது.புத்தக வங்கித் தலைவர் நடேசன் தலைமையில் நடந்த விழாவில், திட்ட இயக்குனர் அழகர் வரவேற்றார். சி.பி.சி.எல்., நிறுவன மேலாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார்.சி.பி.சி.எல்., சார்பில், 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் சுரேஷ்குமார் வழங்கி, மாணவர்களிடயே சிறப்புரை ஆற்றினார். புத்தக வங்கி மூலம், 307 மாணவர்கள் பயன் பெற்றனர்.பொன்னேரி கிளை நூலகர் பேனிக் பாண்டியன் நன்றி கூறினார். விழாவில், நூற்றுக்கணக்கான மாணவர்களும், வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.