sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பட்டப்பகலில் வீடு புகுந்து முதியவர், இளம்பெண்ணை தாக்கி நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

/

பட்டப்பகலில் வீடு புகுந்து முதியவர், இளம்பெண்ணை தாக்கி நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பட்டப்பகலில் வீடு புகுந்து முதியவர், இளம்பெண்ணை தாக்கி நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பட்டப்பகலில் வீடு புகுந்து முதியவர், இளம்பெண்ணை தாக்கி நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


ADDED : செப் 08, 2011 12:00 AM

Google News

ADDED : செப் 08, 2011 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி : திருவாலங்காடு அருகே, பட்டப் பகலில் வீடு புகுந்து முதியவர், இளம்பெண்ணை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சின்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்பு சாகிப் மகன் காதர்பாஷா, 60.

இவர் பெரியகளகாட்டூர் பள்ளி அருகே பங்க் கடை வைத்துள்ளார். இவரது மனைவி பீபிஜான், 55. இவர்களுக்கு பாதுஷா, 40 என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காதர்பீ, 30.நேற்று மதியத்துக்கு பிறகு பீபிஜான் பங்க் கடைக்கு சென்று விட்டார். அவரது மகனும் சென்னைக்கு சென்று விட்டார். வீட்டில் காதர்பாஷாவும், அவரது மருமகள் காதர்பீயும் தனியாக இருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு காரில் வந்த மர்ம நபர்கள் காதர்பாஷாவின் வீட்டுக்குள் புகுந்தனர்.அங்கு தனியாக இருந்த காதர்பாஷா மற்றும் அவரது மருமகள் காதர்பீயையும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு, மின்னல் வேகத்தில் காரில் பறந்தனர். இதை அவ்வழியாக பள்ளியை விட்டுச்சென்ற மாணவர்கள் கவனித்து அப்பகுதி மக்களிடம் கூறினர். உடனடியாக திருவாலங்காடு போலீசாருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த இருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் காதர்பீ கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தாலி சரடு, காதில் அணிந்திருந்த ஒரு சவரன் கம்மல் ஆகியவற்றையும் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து முன் விரோதமா, ரவுடி கும்பலா என, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us