/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் பள்ளி மேலாண்மை குழுக்கள் பெயரளவில் செயல்படுவதாக குற்றச்சாட்டு
/
திருவள்ளூர் பள்ளி மேலாண்மை குழுக்கள் பெயரளவில் செயல்படுவதாக குற்றச்சாட்டு
திருவள்ளூர் பள்ளி மேலாண்மை குழுக்கள் பெயரளவில் செயல்படுவதாக குற்றச்சாட்டு
திருவள்ளூர் பள்ளி மேலாண்மை குழுக்கள் பெயரளவில் செயல்படுவதாக குற்றச்சாட்டு
ADDED : ஆக 08, 2025 10:32 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இயங்கும் மேலாண்மை குழுக்கள் பெயரளவில் செயல்படுவதாக, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர். மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், பல்வேறு அடிப்படை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இயங்கி வரும் மேலாண்மை குழுக்கள், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுகட்டமைப்பு செய்யப்படுகின்றன.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 1,100க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், 2024ம் ஆண்டு, புதிய உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கிய புதிய மேலாண்மை குழு அமைக் கப் பட்டது.
தற்போது, பெரும்பாலான பள்ளிகளில், பெயரளவில் மட்டுமே கூட்டம் நடத்தி, அந்த விபரம் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிராமப்புற அரசு பள்ளிகளில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்துள்ளதால், கூட்டம் நடத்தி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது:
பள்ளி மேலாண்மை குழுவை உருவாக்கி, அதன் பணிகள், அதிகாரம் வரையறுக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. தற்போது, கிராமப்புற பள்ளிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லை. நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகளை பொறுத்தவரை, அதிகாரத்தில் உள்ள முக்கிய உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் மட்டுமே, மேம்பாட்டு பணி மேற்கொள்ள முடிகிறது.
கடந்த காலங்களில், மாதந்தோறும் மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது, பள்ளிக் கல்வித்துறை அறிவிக்கும் தேதிகளில் மட்டுமே, பெயரளவில் கூட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -