sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையை சூழ்ந்த முள்செடிகள் ஆவூரில் வாகன ஓட்டிகள் சிரமம்

/

சாலையை சூழ்ந்த முள்செடிகள் ஆவூரில் வாகன ஓட்டிகள் சிரமம்

சாலையை சூழ்ந்த முள்செடிகள் ஆவூரில் வாகன ஓட்டிகள் சிரமம்

சாலையை சூழ்ந்த முள்செடிகள் ஆவூரில் வாகன ஓட்டிகள் சிரமம்


ADDED : ஜூன் 15, 2025 02:35 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி அருகே மெதுார் கிராமத்தில் இருந்து வேம்பேடு, ஆவூர் வழியாக எடகுப்பம் செல்லும் மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் முள்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.

இவற்றின் கிளைகள் சாலை வரை நீட்டிக் கொண்டிருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோரின் முகத்தில் முள்செடிகள் உரசுவதால், காயம் ஏற்படுகிறது.

மேலும், கார், வேன்களில் முள்செடிகள் உரசும்போது, வாகனங்களில் கீறல்கள் விழுகின்றன. முள்செடிகளால் சாலை குறுகலாக மாறி, வாகனங்கள் எதிரெதிரே பயணிக்கும் போது கூடுதல் சிரமம் ஏற்படுகிறது.

மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளும், முள்செடிகளின் இடையே திடீரென புகுந்து சாலையை கடக்கின்றன. இதை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். அவ்வப்போது சிறு சிறு விபத்துகளுக்கு நடந்து வருகின்றன.

எனவே, சாலையின் இருபுறமும் உள்ள முள்செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us