/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மூன்றரை மணி நேரம் இன்று தரிசனம் ரத்து
/
மூன்றரை மணி நேரம் இன்று தரிசனம் ரத்து
ADDED : ஆக 08, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி முருகன் கோவிலில், வழக்கமாக, காலை 6:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை, கோவில் நடை திறந்து, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இன்று, ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, கோவில் குருக்கள் பூணுால் மாற்றுவதற்கான பூஜை நடத்தப்படுவதால், மதியம் 12:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது.
பின், வழக்கம் போல் கோவில் நடை திறந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்தார்.